வேலைவாய்ப்பு

வனவர் பணிக்கான நேரடி தேர்வு ஒத்திவைப்பு

தினமணி

வனவர் உள்ளிட்ட பணிகளுக்கான நேரடி தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என வனத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த விவரம்:
தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தின் சார்பில் வனவர், கள உதவியாளர்கள் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, டிசம்பர் 13 முதல் 17 ஆம் தேதி வரை நேரடி தேர்வானது வண்டலூர் உயிரியல் பூங்காவில் நடைபெற இருந்தது.
இந்த நிலையில் திங்கள்கிழமை வீசிய வர்தா புயல் காரணமாக, உடற்தகுதி தேர்வு நடத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, இயல்பு நிலை திரும்பிய பின்னர் தேர்வு நடைபெறும் நாள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.அத்துடன் இதுகுறித்த விவரங்களை விண்ணப்பதாரர்கள் அவ்வப்போது www.forests.tn.nic.in என்ற இணையதள முகவரியைப் பார்த்து தெரிந்துகொள்ளுமாறு வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருதியை வியர்வையாக்கி உலகை உயர்த்தும் உழைப்பாளர்கள்: மு.க.ஸ்டாலின்

தில்லி போலீஸில் ரேவந்த் ரெட்டி இன்று ஆஜராகமாட்டார்?

ஜம்மு-காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்!

உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி: விஜய்

ஏற்காடு தனியார் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

SCROLL FOR NEXT