தொழிலாளர் துறையில் புதிதாக நியமிக்கப்படவுள்ள ஓட்டுநர்களுக்கான எழுத்துத் தேர்வு ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதுகுறித்து தொழிலாளர் ஆணையர் கா.பாலசந்திரன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்ளில் உள்ள தொழிலாளர் ஆய்வாளர் அலுவலகங்களில் தலா ஒரு ஓட்டுநர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான எழுத்துத் தேர்வு ஏப்ரல் 9-ஆம் தேதி வேலூர் வசந்தபுரத்தில் உள்ள வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது.
தேர்வில் பங்கேற்க உள்ளவர்களுக்கு ஏற்கெனவே தபால் மூலம் நுழைவுச் சீட்டு அனுப்பப்பட்டுள்ளது. நுழைவுச் சீட்டு கிடைக்கப் பெறாதவர்கள் மாவட்டத்தில் உள்ள தொழிலாளர் ஆய்வாளர் அலுவலகத்தில் அலுவலக வேலை நேரங்களில் நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.