வேலைவாய்ப்பு

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுகளுக்கான வினா-விடை - 20

ஆர். வெங்கடேசன்


- கொற்கை முத்துக் குளியலைக் கூறும் இலக்கியங்கள் மதுரைக்காஞ்சி, சிறுபாணாற்றுப்படை

- விளைந்து முதிர்ந்த விழுமுத்து எனக் கூறும் இலக்கியம் - மதுரைக்காஞ்சி

- பழந்தமிழகத்தின் வாணிகப் பொருள் பற்றிய குறிப்புகளைக் கூறும் இலக்கியங்கள் பட்டிணப்பாலை, மதுரைக்காஞ்சி

- கடலைக் குறிக்கும் தமிழ்ச் சொற்கள் - ஆழி, ஆர்கலி, முந்நீர், வாரணம், பெளவம், பரவை, புணரி

- மரக்கலத்தைக் குறிக்கும் தமிழ்ச்சொற்கள் - கப்பல், கலம், கட்டுமரம், நாவாய், படகு, பரிசல், புணை, தோணி, தெப்பம், திமில், அம்பி, வங்கம், மிதவை, பஃறி, ஒடம்.

- கரிகாலனின் முன்னோர் காற்றின் போக்கு அறிந்து கலம் செலுத்தினர் எனக்கூறும் இலக்கியம் - புறநானூறு.

- பழந்தமிழர் கிரேக்கரையும், உரோமனியரையும் யவனர் என அழைத்தனர்.

- திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்றவர் - ஔவை

- யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்றவர் - கணியன் பூங்குன்றனார்.

- காலில் பிரிவு - தரைவழிப்பிரிவு.

- கலத்தில் பிரிவு - நீர்வழிப்பிரிவு.

- அதியமானின் முன்னோர் காலத்தில் சீனாவிலிருந்து கொண்டு வரப்பட்ட பயிர் - கரும்பு

- பழங்கால வரலாற்றை அறிய உதவும் காலக்கண்ணாடிகள் கல்வெட்டு, செப்பேடு, இலக்கியங்கள்

- ஆனந்தரங்கர் பிறந்த ஊர் - பெரம்பூர்

- ஆனந்தரங்கரின் தந்தை - திருவேங்கடம். 

- ஆனந்தரங்கர் தன் மூன்றாம் வயதில் தன் தாயை இழந்தார். 

- ஆனந்தரங்கரின் ஆசிரியர் பெயர் - எம்பார்.

- ஆனந்தரங்கர் நடத்தி வந்த தொழில் பாக்குக் கிடங்கு

- ஆனந்தரங்கர் தந்தை திருவேங்கடம், மைத்துனர் நைனியப்பரின் வேண்டுகோளுக்கு இணங்க புதுவையில் குடியேறினார். 

- அரசுப்பணியில் உதவியாளராகச் சேர்ந்து, நாளடைவில் திவானாகப் பதவி உயர்வு பெற்றார். 

- ஆனந்தரங்கர் துபாசி (மொழிபெயர்ப்பாளர்) ஆகப் பணியாற்றினார்.

- ஆனந்தரங்கர் துபாசியாக பணியாற்றிய ஆளுநர் - துய்ப்ளே

- “துய்ப்ளே” என்னும் ஆளுநரின் மொழிபெயர்ப்பாளர்(துபாசி) இறந்ததால், ஆனந்தரங்கர் அப்பணிக்கு அமர்த்தப்பட்டார்.

- ஆனந்தரங்கர் தம் நாட்குறிப்பிற்கு இட்ட பெயர்கள் - தினப்படி, செய்திக்குறிப்பு, சொஸ்த லிகிதம்.

- ஆனந்தரங்கர் துபாசியாகப் பணியாற்றிய காலத்தில், 1736ஆம் ஆண்டு முதல் 1761ஆம் ஆண்டு வரை ஏறத்தாழ 25 ஆண்டுகள் நாட்குறிப்பு எழுதியுள்ளார்.

- ஆனந்தரங்கரின் நாட்குறிப்பு வரலாற்றுக் கருவூலமாகத் திகழ்கிறது. 

- முசபர்சங் ஆனந்தரங்கருக்கு 1749-ஆண் ஆண்டில் 3 ஆயிரம் குதிரைகளை வழங்கி அவருக்கு மன்சுபேதார் என்னும் பட்டத்தையும் வழங்கினார்.

- செங்கற்பட்டுக் கோட்டைக்குத் தளபதியாகவும், பின்பு அம்மாவட்ட முழுமைக்கும் ஜாகிர்தாராகவும் நியமித்தார். 

- ஆளுநர் மாளிகைக்குள் பல்லக்கில் செல்லும் உரிமை அவருக்கு வழங்கப்பட்டது. 

- தங்கப் பிடி போட்ட கைத்தடி வைத்துக்கொள்ளவும் செருப்பணிந்து ஆளுநர் மாளிகைக்குள் செல்லவும் ஆனந்தரங்கர் உரிமை பெற்றிருந்தார்.

-   உலக நாட்குறிப்பு இலக்கியத்தின் முன்னோடி - பெப்பிசு

- இந்தியாவின் பெப்பிசு, நாட்குறிப்பு வேந்தர் எனப் போற்றப்பட்டவர் - ஆனந்தரங்கர்.

- பிரெஞ்சுப்படை காரைக்காலைப் பிடிக்கச் சென்று தோல்வியடைந்தது, தில்லியின் மீது பாரசீகப் படையெடுப்பு, குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கிய செய்திகள், இலபூர்தொனோ கப்பல் பிரெஞ்சு நாட்டில்லிருந்து சென்றது, வெளிநாட்டுப் பயணிகள் வந்து சென்ற நிகழ்வுகள் முதலிய முக்கிய வரலாற்றுச் செய்திகள் இடம் பெற்றுள்ளது. 

- துறைமுக நகரங்களில் உள்ள மக்களின் வருவாய்க்கு அடிப்படையாய் அமைவது அங்கு வரும் கப்பல்களின் போக்குவரத்தே ஆகும். 

- புதுச்சேரிக்கு கப்பல்கள் வந்த செய்தி கேட்டதும் மக்கள் மகிழ்தனர். 

- அது குறித்து, “நாட்பட்ட திரவியம் மீண்டும் கிடைத்தாற் போலவும், மரணமுற்ற உறவினர்கள் உயிர்பெற்று எழுந்து வந்தது போலவும், அவரவர் வளவிலே கலியாணம் நடப்பது போலவும், நீண்டநாள் தவங்கிடந்து புத்திர பாக்கியம் கிட்டினாற் ஒளவும், தேவாமிர்த்ததைச் சுவைத்துபோலவும் சந்தோஷித்தார்கள்; அதைக் காகிதத்தில் எழுத முடியாது” என்று குறிப்பிட்டுளார். 

- நீதி வழங்கல், தண்டனை அளித்தல் முதலிய செய்திகளும் நாட்குறிப்பில் இடம் பெற்றுள்ளன. 

- திருட்டு கும்பலின் தலைவனுக்கு கடைத் தெருவில் தூக்கில் இடப்பட்டது என்ற செய்தி குறிக்கப்படுள்ளது. 

- ஆனந்தரங்கர், தம் நாட்குறிப்பில் தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான உறவு, பெரியவர்களை மதிக்கும் பண்பு, பெரியவர்களுக்கு வணக்கம் செய்தல், கோவில் திருவிழாக்கள், பலகை வழக்கங்கள், சடங்குகள் போன்றவற்றை குறித்துள்ளார். 

- சொஸ்த = தெளிந்த அல்லது உரிமையுடைய 

- லிகிதம் = கடிதம் அல்லது ஆவணம் 

- வளவு = வீடு 

- துபாசி = இருமொழிப்புலமை உடையவர் (மொழிப்பெயர்ப்பாளர்) 

- டைஸ் என்னும் இலத்தின் சொல்லுக்கு நாள் என்பது பொருள். 

- டைரியம் என்னும் இலத்தின் சொல்லுக்கு நாட்குறிப்பு என்பது பொருள். இதிலிருந்து டைரி என்னும் ஆங்கிலச் சொல் உருவானது. 

- அருணாச்சலக் கவிராயர் தம் இராமநாடகத்தைத் திருவரங்கத்தில் அரங்கேற்றிய பின்னர், மீண்டும் ஒருமுறை ஆனந்தரங்கர் முன்னிலையில் அரங்கேற்றினார். 

- கே.கே.பிள்ளை- “ஆனந்தரங்கருடைய நாட்குறிப்புகள் அவரது காலத்தில் யாருமே புரிந்திராத அரியதொரு இலக்கியப் பணி” என்றார். 

- வ.வே.சு - “தான் நேரில் கண்டும் கேட்டும் அறிந்துள்ள செய்திகளைச் சித்திரகுப்தனைப் போல் ஒன்றுவிடாமல் குறித்து வைத்துள்ளார்” 

ஆனந்தரங்கர் குறித்து வெளிவந்த இலக்கியங்கள்: 
- ஆனந்தரங்கர் கோவை = தியாகராச தேசிகர் 

- கள்வன் நொண்டிச் சிந்து 

- ஆனந்தரங்கர் பிள்ளைத்தமிழ் = அறிமதி தென்னகன் 

- ஆனந்தரங்கர் விஜயசம்பு = சீனிவாசக்கவி(வடமொழி) 

- ஆனந்தரங்கர் ராட்சந்தமு = கச்தூரிரங்கக்கவி(தெலுங்கு)

தொடரும்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல் பயிரிடப்பட்ட வயல்களை பச்சைப் பாசி பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள்

ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் தோ்த் திருவிழா

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

கோடைகால கிரிக்கெட் போட்டி தொடக்கம்

‘விளையாட்டு விடுதிக்கான தோ்வு போட்டிக்கு விண்ணப்பிக்கலாம்’

SCROLL FOR NEXT