வேலைவாய்ப்பு

என்எல்சி நிறுவனத்தில் ஐடிஐ, +2 முடித்தவர்களுக்கு பணி

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனில் (என்எல்சி) தொழிற் பழகுநர் சட்டம் 1961 ஆம் விதிகளுக்குட்பட்டு

ஆர். வெங்கடேசன்

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனில் (என்எல்சி) தொழிற் பழகுநர் சட்டம் 1961 ஆம் விதிகளுக்குட்பட்டு கீழ்வரும் பிரிவுகளுக்கு 2017-18-ஆம் ஆண்டிற்கான 137 தொழிற் பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஐடிஐ மற்றும் +2 முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த இடங்கள்: 137
பணி இடம்: நெய்வேலி (தமிழ்நாடு)
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Fitter - 22
2. Turner - 08
3. Mechanic (Motor Vehicle) - 37
4. Wireman - 23
பயிற்சிகாலம்: 1 ஆண்டு
உதவித்தொகை: மாதம் ரூ.8,132
தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவுகளில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
5. Mechanic (Tractor) - 14
6. Plumber - 03
7. Carpenter - 02
பயிற்சிகாலம்: 2 ஆண்டுகள்
உதவித்தொகை: முதல் ஆண்டு மாதம் ரூ.7,299. இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.8,132
தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவுகளில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
8. PASAA - 11
பயிற்சி காலம்: 1 ஆண்டு
தகுதி: ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
உதவித்தொகை: மாதம் ரூ.6,325
9. Medical Lab Technician - 17
பயிற்சி காலம்: 6 மாதங்கள்
உதவித்தொகை: மாதம் ரூ.6,325
தகுதி: உயிரியல்(தாவரவியல் மற்றும் விலங்கியல்) ஆகிய பாடங்களுடன் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.04.2017 தேதியின்படி 14 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: 01.03.2017 காலை 10 மணி முதல் 10.03.2017 அன்று மாலை 5 மணிக்குள் www.nlcindia.com என்ற இணையதளத்தின்
எழுத்துத் தேர்வு வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறலாம்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.nlcindia.com/new_website/careers/advt_tat_april17_24022017.pdf என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா - பாக். போரில் நான் இல்லையென்றால் 3.5 கோடி மக்கள் இறந்திருப்பர்: டிரம்ப்

காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

எங்கள் கூட்டணியில் ‘வெயிட் அண்டு சீ ’நிலைமைகள் எதுவும் இல்லை: தமிழிசை சௌந்ததராஜன்

ஆரோவில் சா்வதேச நகரில் இரண்டாவது உலக ஆன்மிக மகோத்ஸவம்: பிரதமா் நரேந்திர மோடி தொடங்கிவைக்கிறாா்

சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி விதிப்பா?

SCROLL FOR NEXT