சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள நர்சிங் சூப்பிரண்டன்ட் மற்றும் சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலி.யிடங்கள்: 328
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Safaiwala -257
பணி: Nursing Superintendent - 35 Posts
பணி: Health & Malaria Inspector - 24 Posts
பணி: Haemo Dialysis Technician - 01 Post
பணி: Extension Educator - 01 Post
பணி: Radiographer - 01 Post
பணி: Pharmacist - 01 Post
பணி: ECG Technician - 01 Post
பணி: Laboratory Assistant. Gr. II - 07 Posts
வயதுவரம்பு: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான வயது வரம்புகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் 01.01.2019 தேதியின்படி 33க்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வும் வழங்கப்படும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி, நர்சிங்-மிட் வைபரி படித்தவர்கள், துணை மருத்துவ பணியிடங்கள் உள்ள பிரிவுகளில் பி.எஸ்.சி., டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.rrcmas.in என்ற இணையத்தின் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.500-ம், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மாற்றுத்திறனாளிகள், பெண் விண்ணப்பதாரர்கள் ரூ.250-ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.08.2018
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://onlinedatafiles.s3.amazonaws.com/docs/Engagement_ParaMedical_Categories_ContractualBasis.pdf மற்றும் http://onlinedatafiles.s3.amazonaws.com/docs/Engagement_Safaiwala_Categories_ContractualBasis.pdf ஆகிய இணையதள பக்க அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.