வேலைவாய்ப்பு

வேலை... வேலை... வேலை... பொறியியல் துறை பட்டதாரிகளுக்கு தேசிய உர நிறுவனத்தில் பணி

தினமணி

பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான தேசிய உர நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் ராமகுண்டம் உரம் மற்றும் ரசாயன நிறுவனம் (RFCL). இந்நிறுவனத்தில் காலியாக உள்ள 101 என்ஜினீயரிங் உதவியாளர், உதவி மேலாளர், துணை மேலாளர் மற்றும் மேலாளர், மூத்த மேலாளர், மூத்த வேதியியலாளர்,  பண்டக அதிகாரி, கணக்கியல் அதிகாரி உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. யாகி உள்ளது. 

வயதுவரம்பு: 30.04.2018-ஆம் தேதியின்படி 30 முதல் 50 வயதுக்குள் இருக்க வேண்டும். ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுவதால் இணையதள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வும் வழங்கப்படும்.

தகுதி: பொறியியல் துறையில் பி.இ., பி.டெக்., பி.எஸ்சி. (என்ஜினீயரிங்) முடித்தவர்கள், எம்.பி.ஏ., முதுநிலை டிப்ளமோ, சி.ஏ., சி.எம்.ஏ., எம்.பி.ஏ., எம்.பி.பி.எஸ்., எம்.டி., எம்.எஸ். போன்ற படிப்புகளை படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.700 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். ஒரு சில பணிகளுக்கு மட்டும் ரூ.1000 கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்.சி.,எஸ்.டி. மற்றும் முன்னாள் படைவீரர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை: http://www.nationalfertilizers.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.05.2018

மேலும் சம்பளம், தேர்வு முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.nationalfertilizers.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

மே 7 வரை வெயில் அதிகரிக்கும்!

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இராணி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

பிங்க் ரோஸ்...ஸ்ரீதேவி

SCROLL FOR NEXT