வேலைவாய்ப்பு

அஞ்சல் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

தினமணி



இந்திய அஞ்சல் துறையின் மகாராஷ்டிரா அஞ்சல் வட்டத்தில் காலியாக உள்ள 3650 'கிராமின் டக் சேவாக்' பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

காலியிடங்கள்: 3650

பணி: BRANCH POSTMASTER (BPM)

பணி: ASSISTANT BRANCH POSTMASTER (ABPM) 

பணி: DAK SEVAK

வயதுவரம்பு: 01.11.2019 தேதியின்படி 18 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் உள்ளூர் மொழித்திறன் பெற்றிருக்க வேண்டும். மேலும் குறைந்தபட்சம் 60 நாட்கள் கால அடிப்படையிலான கணினி பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் பட்டியல் தேர்வு செய்யப்பட்டு அதில் இருந்து தகுதியானவர்களுக்கு அழைப்பு கடிதம் அனுப்பி நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும். மற்ற பிரிவினர்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தை வங்கிகளின் பண பரிவர்த்தனை அட்டைகளை பயன்படுத்தி ஆன்லைனில் செலுத்தலாம். 

விண்ணப்பிக்கும் முறை: https://indiapost.gov.in அல்லது http://appost.in/gdsonline என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய file:///C:/Users/Dotcom/Downloads/Maharashtra-14.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.11.2019

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாளில் இப்படியொரு போஸ்டரா? கவனம் ஈர்த்த அப்புக்குட்டி!

ஆம்பூர் அருகே கோழிப்பண்ணையில் தீ: 5000 கோழிகள் பலி - ரூ.10 லட்சம் இழப்பு

பேருந்தில் தீ: 4 வாக்கு இயந்திரங்கள் நாசம்!

காங்கிரஸ் தலைமைக்கு ரே பரேலி மீண்டும் தயார்: பிரியங்கா

யார் இந்த பிரபலம்?

SCROLL FOR NEXT