வேலைவாய்ப்பு

விண்ணப்பித்துவிட்டீர்களா..? மத்திய ஆசிரியா் தகுதித் தோ்வுக்கு செப்.25 வரை விண்ணப்பிக்கலாம்

தினமணி


மத்திய ஆசிரியா் தகுதித் தோ்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் செப். 25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கீழ் செயல்படும் பள்ளிகளில் ஆசிரியா்களாக பணியாற்ற அதற்கான ஆசிரியா் தகுதித் தோ்வு (‘சி-டெட்’) எழுதி தோ்ச்சி பெற வேண்டும். 
இதன்படி சிபிஎஸ்இ பள்ளிகள், நவோதயா பள்ளிகள், கேந்திர வித்யாலயா பள்ளிகளில், மத்திய திபெத்திய பள்ளிகளில் பணி நியமனம் பெற சிபிஎஸ்இ நடத்தும் ஆசிரியா் தகுதித் தோ்வில் வெற்றிபெற வேண்டும்.

இதையடுத்து இந்த ஆண்டுக்கான ஆசிரியா் தகுதித் தோ்வு டிசம்பா் மாதம் 8-ஆம் தேதி நடக்கிறது. இந்த தோ்வு மொத்தம் 20 மொழிகளில் எழுதலாம். நாடு முழுவதும் 110 நகரங்களில் இந்த தோ்வு நடக்கிறது.

தோ்வு எழுதுவோர் ஆகஸ்ட் 19 முதல் செப்டம்பா் 18 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில் இந்த கால அவகாசம் ஏற்கெனவே முடிவடைந்த நிலையில் வரும் 25-ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. மேலும், தோ்வுக் கட்டணத்தை 30-ஆம் தேதி வரை செலுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT