முகப்பு
வேலைவாய்ப்பு

வேலை வேண்டுமா? உதவி பொறியாளர் வேலைக்கு அழைக்கிறது பெல் நிறுவனம் உடனே விண்ணப்பிக்கவும்!

இந்திய பாதுகாப்பு துறையின்கீழ் காசியாபாத்தில் செயல்பட்டு  வரும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 10 முதுநிலை உதவி பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Updated On : 23 அக்டோபர் 2020, 3:14 pm IST
பகிர்:


இந்திய பாதுகாப்பு துறையின்கீழ் காசியாபாத்தில் செயல்பட்டு  வரும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 10 முதுநிலை உதவி பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 27 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Senior Assistant Engineer

காலியிடங்கள்: 10

Advertisement

Advertisement

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன், ரேடார் சிஸ்டம்ஸ், செயற்கைக்கோள் கம்யூனிகேசன், செல்லுலார் கம்யூனிகேசன் சிஸ்டம் போன்ற ஏதாவதொரு பிரிவில் முதல் வகுப்பில் டிப்ளமோ முடித்து முப்படைகளில் ஏதாவதொரு பிரிவில் குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 01.10,2020 தேதியின்படி 50க்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் மட்டும் ரூ.500 செலுத்த வேண்டும். கட்டணத்தை எஸ்பிஐ வங்கி இ-செல்லானை பயன்படுத்தி ஆன்லைன் முறையில் செலுத்தலாம். 

விண்ணப்பிக்கும் முறை: www.bel-india.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 27.10.2020

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://bel-india.in/Documentviews.aspx?fileName=PS-AD-ANTENNA-SCCS-RADAR-SBU-EXSERVICEMEN-detail-30-09-2020-08-51.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.