வேலைவாய்ப்பு

தேசிய வீட்டுவசதி வங்கியில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

தேசிய வீட்டுவசதி வங்கியில் நிரப்பப்பட உள்ள உதவி மேலாளர். துணை மேலாளர், மண்டல மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி


தேசிய வீட்டுவசதி வங்கியில் நிரப்பப்பட உள்ள உதவி மேலாளர். துணை மேலாளர், மண்டல மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: National Housing Bank

பணி: Assistant Manager

காலியிடங்கள்: 14

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டம், முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பணி தொடர்பான முன் அனுபவம் பெற்றிருந்தால் நல்லது. மொழித்திறன், பகுப்பாய்வு திறன் மற்றும் பொருளாதாரம் சூழ்நிலை குறித்த திறன் பெற்றிருத்தல் வேண்டும்.

பணி: Deputy Manager
காலியிடங்கள்: 02
வயதுவரம்பு: 32க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவெதாரு துறையில் பட்டம், எம்பிஏ, சம்மந்தப்பட்ட துறையில் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Regional Manager
காலியிடங்கள்: 01
வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.
தகுதி:  ஏதாவெதாரு துறையில் பட்டம், தொழில்முறை இடர் மேலாண்மை நிறுவனத்திடமிருந்து சான்றிதழ், சார்ட்டர்ட் ஃபைனான்சியல் முடித்திருப்பவர், சிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் சம்மந்தப்பட்ட துறையில் 2 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும். சந்தை நிலவரம் குறித்த நல்ல புரிதல் மற்றும் பணப்புழக்கம் மேலாண்மை மற்றும் சந்தை பகுப்பாய்வு திறன் பெற்றிருத்தல் விரும்பத்தக்கது.

விண்ணப்பிக்கும் முறை: www.nhb.org.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.12.2021

மேலும் விவரங்கள் அறிய https://nhb.org.in/wp-content/uploads/2021/11/Recruitment_Advertisement_NHB_2021_Eng.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்தில் காயமடைந்த நபா் உயிரிழப்பு

நீட்தோ்வில் வெற்றி பெற்ற மலைக் கிராம மாணவா்!

அறிவுசாா்ந்த இளம் தலைமுறையினா் அரசியலில் வெற்றிடம் ஏற்பட விடக்கூடாது: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா

திருவண்ணாமலையில் நாளை தேசிய கைத்தறி தினவிழா

கொடைக்கானலில் அனுமதியின்றி கட்டப்படும் அடுக்குமாடிக் கட்டடங்கள்!

SCROLL FOR NEXT