திருச்சிராப்பள்ளியில் செயல்பட்டு வரும் தேசிய தொழில்நுட்பக் கழகம் ( என்ஐடி)-இல் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண். NITT/R/RC/NT/2020/02-05
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Junior Assistant - 16
வயதுவரம்பு: 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் மற்றும் கணினியில் பணியாற்றும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Senior Assistant
பணி: Stenographer
காலியிடங்கள்: 07
வயதுவரம்பு: 33க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பிளஸ் தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். கணினியில் பணியாற்றும் திறன் பெற்றிருக்க வேண்டும். பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். Stenographer பணிக்கு பிளஸ் 2 தேர்ச்சியுடன் சுருக்கெழுத்தில் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 89 வார்த்தைகள் எழுதவும், கணினியில் பணிபுரியும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Superintendent - 07
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவெதாரு துறையில் பட்டம் பெற்று கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Technician
காலியிடங்கள்: 30
வயதுவரம்பு: 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஏதாவதொரு பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும் அல்லது 3 ஆண்டு டிப்ளமோ அல்லது கணிதத்தில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: Senior Technician
காலியிடங்கள்: 15
வயதுவரம்பு: 33க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ அல்லது 3 ஆண்டு டிப்ளமோ அல்லது கணிதத்தில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: TechnicianL Assistant
பணி: Junior Engineer
பணி: SAS Assistant
பணி: Library And Information Assistant
காலியிடங்கள்: 26
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் ஏதாவதொரு பிரிவில் பட்டயம் அல்லது பட்டம் பெற்றிருப்பவர்கள், உடற்கல்வியியல் பாடத்தில் முதல் வகுப்பில் பட்டம் பெற்றிருப்பவர்கள், இளங்கலை பட்டத்துடன் பிஎல்ஐஎஸ்சி பட்டம் பெற்றிருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, தொழிற்திறன் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், பெண் விண்ணப்பத்தாரர்கள் ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.nitt.edu என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.01.2021