முகப்பு
வேலைவாய்ப்பு

பிரசார் பாரதியில் பல்வேறு வேலை: கணினி பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

பிரசார் பாரதியின் செயலகத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Updated On : 21 செப்டம்பர் 2021, 6:30 am IST
பகிர்:


பிரசார் பாரதியின் செயலகத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு கணினித் துறையைச் சேர்ந்த பட்டதாரிகளிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Programmer I & II
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.32,500 - 40,000
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: கணினி அறிவியல்,  தகவல் தொழில்நுட்பம் பிரிவில் பி.டெக் அல்லது எம்சிஏ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஏஐசிடிஇ, யுஜிசி அங்கீகாரம் பெற்ற புரோகிராமிங்க் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Mobile Application Developer
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.37,500 - 45,000
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும். 
தகுதி: மென்பொருள் பொறியியல் பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மூன்று ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

Advertisement

Advertisement

பணி: Software Tester
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.37,500 - 45,000
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும். 
தகுதி: கணினி அறிவியல் பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மூன்று ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://applications.prasarbharathi.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.10.2021

மேலும் விவரங்கள் அறிய https://applications.prasarbharathi.org -இல் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments