மத்திய தொழிற்பாதுகாப்பு படையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிக்க தகுதிகள் என்ன தெரியுமா?
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டுவரும் மத்திய தொழிற்பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள 647 உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டுவரும் மத்திய தொழிற்பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள 647 உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: மத்திய தொழிற்பாதுகாப்புப் படை(Central Industrial Security Force)
பணி: ASSTT.SUB INSPECTOR
காலியிடங்கள்: 647
தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
இதற்கு விண்ணப்பிக்கலாம் | மீன்வளத்துறையில் கொட்டிக்கிடக்கும் 600 வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?
விண்ணப்பிக்கும் முறை: https://www.cisf.gov.in/cisfeng/recruitment/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடற்தகுதி தேர்வு மற்றும் மருத்துவப் பரிசோதனைகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
மேலும் விபரங்கள் அறிய https://www.cisf.gov.in/cisfeng/wp-content/uploads/2021/12/3815.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
இதற்கு விண்ணப்பிக்கலாம் | இந்து அறநிலையத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிக்கலாம் வாங்க!