வேலைவாய்ப்பு

மத்திய கடல் ரசாயன ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி? 

தினமணி

மத்திய உப்பு மற்றும் கடல் ஆராய்ச்சி ரசாயன நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Junior Secretariat Assistant(General)
காலியிடங்கள்: 04
பணி: Junior Secretariat Assistant (Finance & Accounts)
காலியிடங்கள்: 02
பணி: Junior Secretariat Assistant (Stores & Purchase)
காலியிடங்கள்: 02

வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.30.830

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் கணினியில் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள், இந்தியில் 30 வார்த்தைகள் தட்டச்சு செய்திருக்க வேண்டும். மேலும் கணக்கியில் தெரிந்திருக்க வேண்டும். 

பணி: Junior Stenographer 

காலியிடங்கள்: 01

வயதுவரம்பு: 27க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.40,353

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் சுருக்கெழுத்தில் எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, தட்டச்சு, சுருக்கெழுத்துத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி, பெண்கள், முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை: http://www.csmcri.res.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். சான்றிதழ்கள் அனைத்தையும் பதிவேற்றம் செய்து ஒரே பிடிஎப் பைலாக மாற்றி விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.06.2022. 

மேலும் விவரங்கள் அறிய http://www.csmcri.res.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

SCROLL FOR NEXT