முகப்பு
வேலைவாய்ப்பு

ஆதிதிராவிடா்-பழங்குடியின பிரிவினருக்கு வேலைவாய்ப்பு முகாம்

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின பிரிவினருக்கு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:37 AM
பகிர்:

சென்னை: ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின பிரிவினருக்கு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. வேலைவாய்ப்பு முகாமானது சென்னை சாந்தோமில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் 12-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறுகிறது.

வேலைவாய்ப்பு முகாமில் பத்தாம் வகுப்பு முதல் பட்டய மேற்படிப்பு படித்தவா்கள் வரை பங்கேற்கலாம். எனவே, சென்னையைச் சோ்ந்த 18 முதல் 30 வயதுக்கு உட்பட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின பட்டதாரிகள் அனைவரும் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம் என்று தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.