சென்னையில் உள்ள ராணுவ வீரர்களுக்கான அதிகாரி பயிற்சி மையத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 191
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: சிவில், பில்டிங் கன்ஸ்ட்ரக்சன் டெக்னாலஜி - 40
பணி: ஆர்க்கிடெக்சர் - 02
பணி: இ.இ.இ. - 14
பணி: கம்ப்யூட்டர் சயின்ஸ் - 33
பணி: ஐ.டி - 09
பணி: எலக்ட்ரானிக்ஸ் டெலிகம்யூனிகேசன் - 06
பணி: டெலிகம்யூனிகேசன் - 03
பணி: எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் - 10
பணி: சாட்டிலைட் கம்யூனிகேசன் - 01
பணி: எலக்ட்ரானிக்ஸ் - 02
பணி: ஏரோநாட்டிக்கல் - 05
பணி: இன்ஸ்ட்ரூமென்டேசன் - 04
பணி: புரொடெக்சன் - 03
தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 01.10.2022 தேதியின்படி, 20 - 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://joinindianarmy.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.04.2022
மேலும் விவரங்கள் அறிய https://joinindianarmy.nic.in/Authentication.aspx என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.