வேலைவாய்ப்பு

தமிழக சுகாதாரத்துறையில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

தினமணி


சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின்கீழ் செயல்பட்டு வரும் நாகப்பட்டினம் சுகாதார மாவட்டத்தில் தேசிய புகையிலை தடுப்பு திட்டத்தில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 24 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் விவரங்கள்: 

பணி: மாவட்ட ஆலோசகர் - 01
சம்பளம்: மாதம் ரூ.35,000

பணி: சமூகபணியாளர் - 01
சம்பளம்: மாதம் ரூ.13,000

பணி: உளவியலாளர் - 01
சம்பளம்: மாதம் ரூ.13,000 

பணி: தரவு உள்ளீட்டாளர் - 01
சம்பளம்: மாதம் ரூ.10,000

தகுதி:  பொது சுகாதாரம், சமூகபணியாளர், மேலாண்மை, சமூகவியல், மனநலவியல் துறையில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும், ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் மற்றும் கணினி குறித்த அறிவு பெற்றிருப்பவர்கள் தரவு உள்ளீட்டாளர் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: நிர்வாக செயலாளர், துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள், மாவட்ட நலவாழ்வு சங்கம், துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், நாகப்பட்டினம். 

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 24.03.2022

மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s3c203d8a151612acf12457e4d67635a95/uploads/2022/03/2022031640.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT