விண்ணப்பித்துவிட்டீர்களா...? - தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!
திருச்சியில் செயல்பட்டு வரும் தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள திட்ட உதவியாளர், இளம் தொழில் வல்லுநர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
திருச்சியில் செயல்பட்டு வரும் தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள திட்ட உதவியாளர், இளம் தொழில் வல்லுநர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனம், திருச்சி
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
மொத்த காலியிடகள்: 05
பணி: Project Assistant - 01
வயது வரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.20,000
பணி: Young Professional - 01
பணி: Young Professional-II - 01
பணி: Young Professional-I - 01
சம்பளம்: மாதம் ரூ.25,000 முதல் ரூ.35,000
வயது வரம்பு: 21 முதல் 45க்குள் இருக்க வேண்டும்.
பணி: Senior Research Fellow - 01
சம்பளம்: மாதம் ரூ.31,000
வயது வரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
இதையும் படிக்க | வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... மத்திய அரசில் 7,500க்கும் அதிகமான குரூப் 'பி', 'சி' வேலைவாய்ப்புகள்
தகுதி: காலியிடங்கள் அறிவிக்கப்பட்ட பிரிவில் இளநிலை, முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : https://nrcb.icar.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள nrcbrecruitment@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 17.01.2022 மற்றும் 19.01.2022
மேலும் விபரங்கள் அறிய https://nrcb.icar.gov.in அல்லது https://nrcb.icar.gov.in/job-opportunities.php லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.