திருச்சி என்ஐடி -இல் தற்காலிகமாக நிரப்பப்பட உள்ள பேராசிரியர் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Faculty(Temporary Recruitment)
மொத்த காலியிடங்கள்: 13
துறைவாரியான காலியிடங்கள்:
1. Computer Science & Engineering - 4
2. Instrumentation and Control Engineering - 2
3. Humanities and Social Science- 1
4. Mathematics - 4
5. B.SC., B.Ed. Programme(ITEP) - 2
சம்பளம்: மாதம் ரூ. 50,000
தகுதி: பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள துறைகள் சார்ந்த ஏதாவதொரு பாடப்பிரிவில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பி.எஸ்சி., பி.எட். புரோகிராம் பிரிவில் ஏதாவதொரு பாடத்தில் எம்.எட் முடித்து கல்வியியல் பாடத்தில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
நேர்முகத் தேர்வு ஜூலை மாதம் இரண்டாவது வாரத்தில் நடைபெறும். இது குறித்த தகவல் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.nitt.edu என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிற்க்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Registrar, National Institute of Technology, Tiruchirappalli – 620015, Tamil Nadu
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள்: 28.6.2024
மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.