வேலைவாய்ப்பு

விவசாயக் கல்லூரிகளில் பேராசிரியர் வேலை: காலியிடங்கள் 582

விவசாயக் கல்லூரிகள் மற்றும் விவசாய ஆராய்ச்சி மையங்களில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர், சீனியர் டெக்னிக்கல் அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு

DIN

இந்திய வேளாண் துறையின்கீழ் செயல்பட்டு வரும் விவசாயக் கல்லூரிகள் மற்றும் விவசாய ஆராய்ச்சி மையங்களில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர், சீனியர் டெக்னிக்கல் அலுவலர் போன்ற 582 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 21 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Assistant Professor(Subject Matter Specialist)

காலியிடங்கள்: 41

சம்பளம்: மாதம் ரூ. 56,100 - 1,77.500

வயதுவரம்பு: 1.8.2025 தேதியின்படி 21 முதல் 35-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Senior Technical Officer

காலியிடங்கள்: 83

சம்பளம்: மாதம் ரூ. 56,100 - 1,77,500

வயதுவரம்பு: 1.8.2025 தேதியின்படி 21 முதல் 35-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Agricultural Research Scientist(ARS)

காலியிடங்கள்: 458

சம்பளம்: மாதம் ரூ.57,700 - 1,82,400

வயதுவரம்பு: 1.8.2025 தேதியின்படி 21 முதல் 32-க்குள் இருக்க வேண்டும்.

வயதுவரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.

ஏஎஸ்ஆர்பி - நெட் தேர்வு எழுதி கல்லூரி உதவிப் பேராசிரியர் பணியில் சேர விரும்புவோருக்கு உச்ச வயதுவரம்பில்லை.

தகுதி: வேளாண் உயிரி தொழில்நுட்பம், வேளாண் பூச்சியியல், வேளாண் நுண்ணுயிரியல், தாவர உயிர் வேதியியல், மலர் வளர்ப்பு, பழ அறிவியல், விலங்கு உயிர் வேதியியல், விலங்கு ஊட்டச்சத்து, விலங்கு உடலியல், பால் வேதியியல், பால் நுண்ணுயிரியல், பால் தொழில்நுட்பம், கால்நடை தயாரிப்பு தொழில்நுட்பம், கால்நடை உற்பத்தி மேலாண்மை, கோழி அறிவியல், கால்நடை மருத்துவம், கால்நடை நுண்ணுயிரியல், கால்நடை மருந்தியல், மீன்வளர்ப்பு, தொழில்நுட்பம் வேளாண் வனவியல், வேளாண்மை, மண் அறிவியல், சுற்றுச்சூழல் அறிவியல், வேளாண் பொருளாதாரம் போன்ற ஏதாவதொரு பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்று நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் மூலம் நடத்தப்படும் ஏஎஸ்ஆர்பி-நெட் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

ஏஎஸ்ஆர்பி-நெட் தேர்வு முதல்நிலை, முதன்மைத் தேர்வு என இரண்டு நிலைகளைக் கொண்டது.

முதல்நிலைத் தேர்வு நடைபெறும் நாள்: 2.9.2025 - 4.9.2025

முதன்மைத் தேர்வு நடைபெறும் நாள்: 7.12.2025

தேர்வுக்கான நுழைவுச்சீட்டை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினர் ரூ.1000, ஓபிசி, இடபுள்யுஎஸ் பிரிவினர் ரூ.500, இதர பிரிவினர் ரூ.250 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.asrb.org.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 21.5.2025

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தாயகம் திரும்பினார் விண்வெளி நாயகன் சுபான்ஷு சுக்லா!

மாமல்லபுரம் அருகே கடலில் நவீன கருவிகளுடன் இந்திய தொல்லியல் துறையினா் சோதனை

பணவரவு யாருக்கு இன்று: தினப்பலன்கள்!

கிருங்காக்கோட்டையில் மாட்டு வண்டிப் பந்தயம்

மாவட்ட நிா்வாகத்தால் அறிவிக்கப்பட்ட நீா் நிலைகளில் விநாயகா் சிலைகளை கரைக்க வேண்டும்: ஆட்சியர்

SCROLL FOR NEXT