முகப்பு
வேலைவாய்ப்பு

நாள்தோறும் ரூ.1000 சம்பளத்தில் உளவியல் ஆலோசகர் வேலை வேண்டுமா?

ஈரோடு மாவட்ட சமூக நலத் துறையின்கீழ் செயல்படும் அன்னை சத்தியா அரசு குழந்தைகள் காப்பகத்தில் உளவியல் ஆலோசகர் பணி

Updated On : 22 மே, 2025 at 6:42 AM
தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் மருந்தாளுநர் வேலை
பகிர்:

ஈரோடு மாவட்ட சமூக நலத் துறையின்கீழ் செயல்படும் அன்னை சத்தியா அரசு குழந்தைகள் காப்பகத்தில் உளவியல் ஆலோசகர் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Counsellor

காலியிடம்: 1

சம்பளம்: மதிப்பூதியம் அடிப்படையில் நாள்தோறும் 1,000 வீதம் மாதத்திற்கு 9 நாள்கள் என ஆண்டு முழுவதும் வழங்கப்படும்.

தகுதி: உளவியல் மற்றும் ஆலோசனை பிரிவில் இளங்கலைப் பட்டம் மற்றும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பத்தாரர் தங்கள் குறித்த முழு விபரம் அடங்கிய விண்ணப்பத்தை தயார் செய்து, அதைப் பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான சான்றுகளின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மேற்கண்ட பணி சம்மந்தமான அறிவிப்பு www.erode.nic.in என்ற ஈரோடு மாவட்ட இணையதள முகவரியில் சென்று பார்த்து படித்து தெரிந்துகொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், மாவட்ட ஆட்சியர் கூடுதல் வளாகம் (புதிய கட்டடம்), 6 ஆவது தளம், ஈரோடு - 638 011.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 23.5.2025

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

முழு கட்டுரையைப் படிக்க →