முகப்பு
வேலைவாய்ப்பு

ரூ.21,000 சம்பளத்தில் குழந்தைகள் சேவை மையத்தில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் குழந்தைகள் சேவை மையத்தில் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள பணியிடங்கள் தொடர்பாக....

Updated On : 16 நவம்பர், 2025 at 12:27 PM
பகிர்:

திண்டுக்கல் மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் திண்டுக்கல் ரயில் நிலையம் குழந்தை உதவி மேசை அலுவலகத்திற்கு 3 மேற்பார்வையாளர், 3 வழக்கு பணியாளர் மற்றும் பழனி பேருந்து நிலைய குழந்தை உதவி மேசை அலுவலகத்திற்கு 1 மேற்பார்வையாளர் என 7 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள பெண்களிடம் இருந்து வரும் 24 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: மேற்பார்வையாளர்(Supervisor)

காலியிடங்கள்: 4(3+1)

சம்பளம்: மாதம் ரூ.21,000

தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் சமூகப் பணி,கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், சமூக சமூகவியல், சமூகவியல் ஆகிய ஏதாவதொரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: வழக்கு பணியாளர்(Case Worker)

காலியிடங்கள்: 3

சம்பளம்: மாதம் ரூ.18,000

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 42-க்குள் இருக்க வேண்டும்.

மேற்கண்ட பணியிடங்களுக்கு திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், பிளசிங்ஸ், பிளாட் எண்.4, 2- ஆவது குறுக்குத் தெரு(மாடி), எஸ்பிஆர் நகர், மாவட்ட ஆட்சியரகம்(அஞ்சல்), திண்டுக்கல் - 624 004. தொலைபேசி எண்: 04512904070

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து கடைசி நாள்: 24.11.2025.

மேலும், கூடுதல் விவரம் பெற www.dindigul.nic.in ன்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

summary

Dindigul Railway Station and Palani Bus stand Child Help Desk Recruitment Notification

முழு கட்டுரையைப் படிக்க →