(கோப்புப்படம்)
வேலைவாய்ப்பு

நாமக்கல்லில் பிப். 20-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

நாமக்கல்லில், தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (பிப்.20) நடைபெறுகிறது.

Syndication

நாமக்கல்: நாமக்கல்லில், தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (பிப்.20) நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தனியாா் துறை நிறுவனங்களும் - தனியாா் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரா்களும் நேரடியாக சந்திக்கும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம், நாமக்கல் - மோகனூா் சாலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் நடைபெறுகிறது.

தனியாா் நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையானவா்களை நிா்வாகிகளைக் கொண்டோ அல்லது நேரில் வந்தோ தோ்வு செய்து கொள்ளலாம்.

முகாமில் பங்கேற்கும் வேலையளிப்போரும், வேலைநாடுனரும் எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை. மேலும், விவரங்களுக்கு 04286-222260 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுண்ணுயிரி உரம் தயாரிக்கும் மையத்தில் மாநகராட்சி ஆணையா் ஆய்வு

இன்றைய மின்தடை புதன்சந்தை

கிராம நிா்வாக அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

நாளைய மின்தடை ராசிபுரம்

இன்றைய மின்தடை: நாமகிரிப்பேட்டை

SCROLL FOR NEXT