மாத உதவித்தொகையுடன் சாப்ட்வேர் தொழிற்நுட்ப பூங்காவில் அப்ரண்டிஸ்!
புது தில்லியில் உள்ள இந்திய மென்பொருள் தொழில்நுட்பப் பூங்காவில் ஒரு ஆண்டிற்கான தொழிற்பயிற்சிப் பணிக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக...
இந்திய மென்பொருள் தொழில்நுட்பப் பூங்காக்கள்(எஸ்டிபிஐ), எஸ்டிபி, இஎச்டிபி திட்டத்தின் கீழ் ஏற்றுமதியாளர்களுக்குச் சட்டரீதியான சேவைகளை வழங்குவதோடு, அதிவேக இணையம் மற்றும் ஐபிஎல்சி இணைப்புகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளையும் விரிவுபடுத்துகிறது. எஸ்டிபிஐ தற்போது நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் 71 மையங்களுடன் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், புது தில்லியில் உள்ள இந்திய மென்பொருள் தொழில்நுட்பப் பூங்காவில் ஒரு ஆண்டிற்கான தொழிற்பயிற்சிப் பணியாளர் பதவிக்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்த விபரம் வருமாறு:
Advertisement
வேலைவாய்ப்பு விளம்பர அறிவிப்பு எண்.: 7(1)/1/STPI-HQ/2026-27
பயிற்சியின் பெயர்: Graduate Apprentice
காலியிடங்கள் : 8
தகுதி: பொறியியல் துறையில் ஐடி, இஇஇ, இசிஇ, சிஎஸ்இ போன்ற ஏதாவதொரு பிரிவில் பி.இ. அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். பொறியியல் இல்லாத பிரிவுக்கு ஏதாவதொரு துறையில் பி.இ., பி.காம் போன்ற ஏதாவதொரு இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
உதவித்தொகை: பொறியியல் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ. 15,000; கலை, அறிவியல் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.12,300 வழங்கப்படும்.
பயிற்சியின் பெயர்: Technician Apprentice
காலியிடங்கள் : 7
உதவித்தொகை: மாதம் ரூ.10,900
தகுதி: பொறியியல் துறையில் ஐடி, இஇஇ, இசிஇ, சிஎஸ்இ போன்ற ஏதாவதொரு பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு : மேற்கண்ட அனைத்துப் பயிற்சிகளுக்கும் 11.5.2026 தேதியின்படி 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும், 27 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: சம்பந்தப்பட்ட படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர். ஏப்ரல் 2021-ஆம் ஆண்டிற்கு பிறகு படிப்பை முடித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும். ஏற்கனவே பயிற்சி பெற்றவர்கள், பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம். பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஒரு ஆண்டு பயிற்சி வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.nats.education.gov.in என்ற இணையதளத்தில் தங்களது கல்வித்தகுதியை பதிவு செய்துவிட்டு பின்னர் www.stpi.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 11.5.2026
விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.