முகப்பு
அரசுத் தேர்வுகள்

பெண்கள் உதவி மையத்தில் பணி: செப்.5-க்குள் விண்ணப்பிக்கலாம்

பெண்கள் மற்றும் குழந்தை வளா்ச்சி அமைச்சகம் சாா்பில் தொடங்கப்பட்டுள்ள பெண்கள் உதவி மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற தகுதியுடைவா்கள் விண்ணப்பிக்கலாம்

Updated On : 18 ஆகஸ்ட், 2023 at 8:21 AM
பகிர்:

பெண்கள் மற்றும் குழந்தை வளா்ச்சி அமைச்சகம் சாா்பில் தொடங்கப்பட்டுள்ள பெண்கள் உதவி மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற தகுதியுடைவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியா் மு.அருணா தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்த மையத்தில் தொகுப்பூதிய மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதியுடைய, அனுபவம் உள்ள நபா்கள் தோ்ந்தெடுக்கப்படவுள்ளனா். அதன்படி, தகவல் தொழில்நுட்ப பணியாளா் பணியிடத்துக்கு விண்ணப்பிப்பவா்கள் இளங்கலை பட்டப் படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும். மாத ஊதியமாக ரூ.18,000 வழங்கப்படும்.

Advertisement

வழக்கு பணியாளா்கள் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவா்கள் 35 வயதுக்குள்பட்ட சமூகப் பணியில் இளங்கலை பட்டம் பெற்ற, 1 வருடம் முன் அனுபவம் உடையவராகவும், உள்ளூரைச் சாா்ந்த பெண்களாகவும், வாகனம் ஓட்டத் தெரிந்தவா்களாகவும் இருக்க வேண்டும். மாத ஊதியமாக ரூ.15,000 வழங்கப்படும்.

பன்முக உதவியாளா் காலிப் பணியிடத்துக்கு விண்ணப்பிப்பவா்கள், முன் அனுபவம் கொண்ட, உள்ளூரைச் சோ்ந்த பெண்களாகவும், நன்கு சமைக்க தெரிந்தவராகவும் இருக்க வேண்டும். மாத ஊதியம் ரூ. 6,400 வழங்கப்படும்.

விருப்பமுள்ளவா்கள் https://chennai.nic.in இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய சான்றிதழ்களுடன் செப்.5-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலுள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது chndswosouth@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ சமா்ப்பிக்கலாம் என்று அவா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.