அஸாம் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை செவ்வாய்கிழமை வரை 155-ஆக அதிகரித்துள்ளது.
அஸாம் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்த காரணத்தால் பலர் உயிரிழந்த அபாயச் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், செவ்வாய்கிழமை நிலவரப்படி உயிரிழப்புகளின் எண்ணிக்கை 155-ஆக அதிகரித்துள்ளது. 300-க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து மருத்துவமனயில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
3 வெவ்வேறு நிகழ்வுகளில் கோலகட் பகுதியில் 95 உயிரிழப்புகள், ஜோர்ஹத் பகுதியில் 60 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. மேலும் 8 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கள்ளச்சாராயம் விநியோகித்தது தொடர்பாக இதுவரை 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்விவகாரத்தில் சிபிஐ நடவடிக்கை வேண்டும் என்று அம்மாநில காங்கிரஸ் கட்சி கோரிக்கை வைத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.