ஜனநாயகத்தின் பலம் மக்களின் நம்பிக்கையில் இருப்பதாக கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்தார்.
இதுதொடர்பாக அரசியல் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், கேரள முன்னாள் முதல்வருமான உம்மன் சாண்டி கூறியதாவது:
ஜனநாயகத்தின் உண்மையான பலம் அரசு மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையில் உள்ளது. அதனால் அவை ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களில் இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
அதுபோன்று நம்பகத்தன்மை, அர்ப்பணிப்பு மற்றும் நேர்மை ஆகியவற்றின் அடிப்படையிலேயே ஒரு அரசியல் தலைவர் மீதும் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுகிறது என்று தெரிவித்தார்.