தேசியச் செய்திகள்

5 ஆண்டுகள் சட்டப்போராட்டம்: கணவர் மரணத்துக்கான ரூ.55 லட்சம் ஆயுள் காப்பீட்டை 'வென்றெடுத்த மனைவி'

கணவரின் மரணத்துக்கான ரூ.55 லட்சம் ஆயுள் காப்பீட்டை 5 ஆண்டுகள் சட்டப்போராட்டத்துக்கு பின் மனைவி வென்றெடுத்தார். 

ENS

கணவரின் மரணத்துக்கான ரூ.55 லட்சம் ஆயுள் காப்பீட்டை 5 ஆண்டுகள் சட்டப்போராட்டத்துக்கு பின் மனைவி வென்றெடுத்தார். 

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கிளையில் முதன்மை மேலாளராக பணியாற்றி வந்த திருமுருகன் (57), சென்னையின் பெரும்பாக்கம் அருகே கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் வேன் மோதி உயிரிழந்துள்ளார்.

ஆனால், அவருடைய ஆயுள் காப்பீட்டை வழங்க காப்பீடு நிறுவனம் மறுத்துள்ளது. இதையடுத்து வழக்குப் பதிவு செய்த அவரது மனைவி ஷென்பக தேவி, அதில் குறிப்பிட்டதாவது, எனது கணவரின் வருமானத்தில் தான் எங்கள் குடும்பம் நடைபெற்று வந்தது. காலை நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது அவர் மீது வேன் மோதியது.

உடனடியாக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்கு அந்த விபத்து தான் முக்கிய காரணம் என்றிருந்தது. ஆனால், விபத்துக்கு வேன் காரணமில்லை. அவர் சாலை விதிகளை மதிக்காமல் சென்றதுதான் காரணம் எனக்கூறி நியூ இந்தியா அஷுரன்ஸ் காப்பீடு நிறுவனம் அதற்கு மறுப்பு தெரிவித்து வந்தது.

இந்நிலையில், நீதிபதி செல்வகுமார் முன்னிலையில் நடைபெற்ற விசாரணையில், விபத்தில் உயிரிழந்த திருமுருகனின் மனைவி மற்றும் மகன் ஆகியோரிடம் ரூ.55 லட்சம் காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க உத்தரவிடப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழி

வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம்! இபிஎஸ் விளக்கம்

பிரியங்கா மோகனின் மேட் இன் கொரியா வெளியீட்டுத் தேதி!

குமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!

கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!

SCROLL FOR NEXT