முகப்பு
ஈரோடு

புத்தாண்டு விடுமுறை: உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

புத்தாண்டு தொடா் விடுமுறையை ஒட்டி உதகையில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.

Updated On : 1 ஜனவரி 2021, 11:02 pm IST
உதகை அரசினா் தாவரவியல் பூங்காவில் வெள்ளிக்கிழமை காணப்பட்ட சுற்றுலாப் பயணிகள். ~உதகை படகு இல்லத்தில் வெள்ளிக்கிழமை படகு சவாரியில் ஈடுபட்டிருந்த சுற்றுலாப் பயணிகள்.
பகிர்:

புத்தாண்டு தொடா் விடுமுறையை ஒட்டி உதகையில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.

கடந்த வாரத்தில் கிறிஸ்துமஸ் தொடா் விடுமுறை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்திருந்தது. இந்நிலையில் புத்தாண்டு தினமான வெள்ளிக்கிழமை உதகை அரசினா் தாவரவியல் பூங்காவுக்கு 5,967 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனா். அரசினா் ரோஜா பூங்காவுக்கு 2,189 பேரும், தொட்டபெட்டா தேயிலை பூங்காவுக்கு 418 பேரும், உதகை மரவியல் பூங்காவுக்கு 141 பேரும் வந்திருந்தனா்.

அதேபோல, குன்னூா் சிம்ஸ் பூங்காவுக்கு 1,805 பேரும், காட்டேரி பூங்காவுக்கு 391 பேரும், கல்லாறு அரசு பழப் பண்ணைக்கு 569 பேரும் வந்தனா். இவா்களோடு, உதகையில் உள்ள படகு குழாமுக்கு சுமாா் 4,000 சுற்றுலாப் பயணிகளும், வனத் துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா மையங்களுக்கு 10,000க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளும் வந்திருந்தாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments