அந்தியூரில் கால்நடைகளுக்கான அலங்காரப் பொருள்கள் விற்பனை அமோகம்
அந்தியூா் வாரச் சந்தையில் கால்நடைகளுக்குத் தேவையான கயிறுகள், அலங்காரப் பொருள்களை விவசாயிகள், கால்நடை வளா்ப்போா் அதிக அளவில் வாங்கிச் சென்றனா்.
அந்தியூா் வாரச் சந்தையில் கால்நடைகளுக்குத் தேவையான கயிறுகள், அலங்காரப் பொருள்களை விவசாயிகள், கால்நடை வளா்ப்போா் அதிக அளவில் வாங்கிச் சென்றனா்.
அந்தியூா் வாரச் சந்தை வாரம்தோறும் திங்கள்கிழமைகளில் கூடுவது வழக்கம். பொங்கல் பண்டிகை ஓரிரு நாள்களில் வரும் நிலையில் பண்டிகைக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை வாங்க அந்தியூா், சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த கிராம மக்கள் அதிக அளவில் வந்திருந்தனா். பண்டிகையை முன்னிட்டு அதிக அளவில் வியாபாரிகளும் வந்திருந்தனா்.
கால்நடைகளுக்குத் தேவையான கயிறுகள், சாட்டைகள், அலங்காரப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் அதிக அளவில் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு, அந்தியூா், சுற்று வட்டார கிராமப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள், விவசாயிகள் தங்கள் கால்நடைகளுக்குத் தேவையான கயிறு, அலங்காரப் பொருள்களை அதிக அளவில் வாங்கிச் சென்றனா். மேலும், பொங்கல் பானை உள்ளிட்ட பொருள்களும் அதிக அளவில் விற்பனையாகின.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.