அருணாச்சலேஸ்வரர் கோவிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா நவம்பர் 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.3500 கிலோ நெய்,1000 மீட்டர் காடா துணியை பயன்படுத்தி மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது.இன்று அதிகாலை மூன்றரை மணி அளவில் வேத மந்திரங்கள் முழங்க பரணி தீபம் ஏற்றப்பட்டது.இதனைத் தொடர்ந்து இன்று மாலை அர்த்தநாரீஸ்வரர் காட்சி தந்ததும் சாமி சன்னதி முன்பு அகண்டதீபம் ஏற்றப்பட்டது. அதே நேரத்தில் மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட்டது.மலையில் ஏற்றப்பட்ட மகாதீபம் தொடர்ந்து 11 நாட்கள் எரியும்.