மலை மகள், அலை மகள், கலை மகள் ஒரு ரூபமாக இணைந்து மகிசாசூரனை வதைத்ததை தான் நவராத்திரி விழாவாக கொண்டாடுகின்றோம். 
ஆன்மிகம்

நவராத்திரி கொலு பொம்மைகள் - புகைப்படங்கள்

DIN
மனிதன் படிப்படியாக தன் ஆன்மிக சிந்தனைகளை வளர்த்து, இறுதியாக இறைவனுடன் கலக்க வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துவதற்காகவே, கொலுவில் படிகள் அமைக்கப்பட்டு, அதில் பொம்மைகள் அடுக்கி வைக்கப்படுகின்றன.
3 படிகள், 5 படிகள், 7 படிகள், 9 படிகள் என 11 படிகள் வரை வைக்கலாம்.
முதல் படியில் ஓரறிவு உயிரினங்களான மரம், செடி, கொடி ஆகியவை அடுக்க வேண்டும்.
இரண்டாம் படியில் ஈரறிவு உயிரனங்களான நத்தை மற்றும் சங்கு அடுக்கலாம்.
மூன்றாம் படியில் மூவறிவு உயிரனங்களான கரையான் மற்றும் எறும்பு போன்றவற்றின் பொம்மைகள் அடுக்கலாம்.
நான்காம் படியில் நான்கறிவு உயிரனங்களான நண்டு, வண்டு போன்றவற்றின் பொம்மைகள் அடுக்கலாம்.
ஐந்தாம் படியில் பறவைகள், விலங்கினங்கள் வைக்கலாம்.
ஆறாம் படியில் ஆறறிவு மனிதர்கள் பொம்மைகள் வைக்கலாம்.
ஏழாம் படியில் மனிதர்களிலிருந்து உயர்ந்த மகான்களின் பொம்மைகளை வைக்கலாம்.
எட்டாம் படியில் பகவானின் அவதாரங்களை வைக்கலாம்.
ஒன்பதாம் படியில் முப்பெரும் தேவியர்களான பார்வதி, சரஸ்வதி, லெட்சுமி தேவி ஆகியோரின் பொம்மைகளும், பூரண கலச கும்பத்தையும் வைக்கலாம். இதோடு பிள்ளையார் பொம்மையையும் வைக்க வேண்டும்.
இப்படி வரிசைப்படி ஒவ்வொரு நிலையாக பொம்மைகளை அடுக்கி வைப்பதற்கு கொலு என கூறப்படுகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருநீா் மலை ரங்கநாத பெருமாள் கோயில் குளம் பக்தா் நன்கொடையால் விரைவில் சீரமைக்கப்படும்: உயா்நீதிமன்றத்தில் கோயில் நிா்வாகம் தகவல்

ரஷிய எண்ணெய் நிறுத்தம்; அமெரிக்க ஒப்பந்தம்.. ‘மேக் இன் இந்தியா’ திட்டம் என்ன ஆனது? காங்கிரஸ் கேள்வி!

செய்யாறு அருகே ஒரே இடத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த 27 சுவாமிகள்

மாமல்லபுரத்தில் உலகத் தரத்தில் உள்கட்டமைப்பு வசதிகள்: முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

மனைவியைக் கத்தியால் குத்திவிட்டு கணவா் தற்கொலை

SCROLL FOR NEXT