திருச்சி ஸ்ரீரங்கத்தில் பிரதமர் மோடி சாமி தரிசனம் - புகைப்படங்கள்
பிரசித்தி பெற்றதும், 108 வைணவத்தலங்களுள் முதன்மையானதுமான திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (சனிக்கிழமை) சாமி தரிசனம் செய்தார்.
பிரதமர் நரேந்திர மோடியை உற்சாகமாக வரவேற்கும் பண்டிதர்கள்.11 நாள் விரதம் இருந்து வரும் பிரதமர் நரேந்திர மோடி, ஸ்ரீரங்கம் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.தெற்கு கோபுர வாசல் வழியாக கோயிலுக்குள் நுழைந்த பிரதமருக்கு பூரண கும்பமரியாதை அளிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
ஸ்ரீரங்கம் கோயிலில் சாமி தரிசனம் செய்த போது தமிழர் பாரம்பரியம் உடையான வேஷ்டி சட்டையில் ஆடை அணிந்து இருந்தார்.பிரதமரின் வருகையை ஒட்டி ஸ்ரீரங்கத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.பிரதமரின் சாமி தரிசனத்தை முன்னிட்டு பகல் 2.30 மணி வரை பொது மக்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
ஸ்ரீரங்கம் கோயிலில் பிரதமர் மோடி.கருடாழ்வார் மூலவர் தாயார் உள்ளிட்ட முக்கிய சன்னதிகளிலும், சக்கரத்தாழ்வார், பட்டாபிராமர், கோதண்ட ராமர், ராமானுஜர் சன்னதிகளிலும் சாமி தரிசனம் செய்தார்.திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் சாமி தரிசனம் செய்யும் பிரதமர் மோடி.
ஸ்ரீரங்கம் கோயிலில் பிரதமர் மோடிக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.கம்பர் மண்டபத்தில் அமர்ந்து ராமாயண பாராயணத்தைக் கேட்ட பிரதமர் மோடி.ஸ்ரீரங்கம் கோவில் யானை ஆண்டாளிடம் ஆசிபெற்ற பிறகு யானையின் தும்பிக்கையை தடவி கொடுத்து மகிழ்ந்த பிரதமர் மோடி.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.