முகப்பு
லைஃப்ஸ்டைல்

எழும்பூர் - கோடம்பாக்கம் இடையே நீராவி இன்ஜின் இயக்கம் - புகைப்படங்கள்

சென்னை எழும்பூர் - கோடம்பாக்கம் இடையே 167 ஆண்டுகள் பழமைவாய்ந்த நீராவி இன்ஜின் இயக்கப்படுவது சென்னை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Updated On : 15 ஆகஸ்ட் 2022, 8:43 pm IST
சென்னை எழும்பூர் - கோடம்பாக்கம் இடையே 167 ஆண்டுகள் பழமைவாய்ந்த நீராவி இன்ஜின் சிறப்பு ரயில் இயக்கி சென்னை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது தெற்கு ரயில்வே.
பகிர்:
'இஐஆர் 21' என்ற நீராவி ரயில் இன்ஜின் இந்தியாவிலியேயே மிகவும் பழமை வாய்ந்தது.
கடந்த 1855-ஆம் ஆண்டு தயாரான இந்த இன்ஜின், இந்திய ரயில்வேக்கு 55 ஆண்டுகள் சேவை செய்தது.
கடந்த 1909-ம் ஆண்டு தனது பணியை முடித்து கொண்டு, ஜமால்பூர் ரயில்வே அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இந்த இன்ஜினுடன் ஒரு பெட்டி மட்டும் இணைக்கப்பட்டு, மக்களின் பார்வைக்காக ஆண்டுதோறும் ஒன்றிரண்டு முறை இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நீராவி ரயிலில் ஓரிரு முறை மட்டுமே பொதுமக்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டது.
பழைய ‘ஹாரன்’ சத்தத்துடன் புகையை வெளியேற்றியபடி மெதுவாக செல்லும் இதன் அழகை காண சென்னை மக்கள் பலரும் ஆர்வமாக வருவார்கள்.
புகையை வெளியேற்றியபடி மெதுவாக செல்லும் பாரம்பரிய நீராவி ரயில்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments