சென்னை எழும்பூர் - கோடம்பாக்கம் இடையே 167 ஆண்டுகள் பழமைவாய்ந்த நீராவி இன்ஜின் சிறப்பு ரயில் இயக்கி சென்னை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது தெற்கு ரயில்வே.
'இஐஆர் 21' என்ற நீராவி ரயில் இன்ஜின் இந்தியாவிலியேயே மிகவும் பழமை வாய்ந்தது.கடந்த 1855-ஆம் ஆண்டு தயாரான இந்த இன்ஜின், இந்திய ரயில்வேக்கு 55 ஆண்டுகள் சேவை செய்தது.கடந்த 1909-ம் ஆண்டு தனது பணியை முடித்து கொண்டு, ஜமால்பூர் ரயில்வே அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது.இந்த இன்ஜினுடன் ஒரு பெட்டி மட்டும் இணைக்கப்பட்டு, மக்களின் பார்வைக்காக ஆண்டுதோறும் ஒன்றிரண்டு முறை இயக்கப்பட்டு வருகிறது.இந்த நீராவி ரயிலில் ஓரிரு முறை மட்டுமே பொதுமக்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டது.பழைய ‘ஹாரன்’ சத்தத்துடன் புகையை வெளியேற்றியபடி மெதுவாக செல்லும் இதன் அழகை காண சென்னை மக்கள் பலரும் ஆர்வமாக வருவார்கள்.புகையை வெளியேற்றியபடி மெதுவாக செல்லும் பாரம்பரிய நீராவி ரயில்.