சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்றவர்களின் வரிசையில் தற்போது வாணி போஜன் சேர்ந்துள்ளார்.பிரபல தொலைக்காட்சி ஒன்றில் தொடர் மூலம் தமிழ் குடும்பங்கள் அனைவரின் மனதிலும் இடம் பிடித்தவர்.தமிழக பெண்களின் மனதில் இடம் பிடித்தவர் வாணி போஜன்.சின்னத்திரையில் கலக்கி விட்டு இப்ப வெள்ளித்திரையில் தனது காலடி எடுத்து வைத்து உள்ளார்.தொடர்களில் நடித்துக் கொண்டு இருக்கும் போதே பல வாய்ப்புகள் தேடி வந்தன.சீரியல்களில் நடிக்கும் போதே கதைகளை தேர்வு செய்யது நடித்ததால் அதே பார்முலாவையே பெரியதிரையில் கடைப்பிடித்து வருகிறார்.இவருடைய போட்டோஸ் பெரிய அளவில் வைரல் ஆகி விடுகிறது.தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த பட வாய்ப்பை கைப்பற்றி உள்ளது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.சூர்யா தயாரிக்கும் இரண்டு படங்களில் நடிக்கவும் தேர்வாகி உள்ளார்.ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கும் வெப் தொடரில் நடிக்கவும் வாணி போஜனிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது.விக்ரம் பிரபு ஜோடியாக புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதன் படப்பிடிப்பை கொரோனா ஊரடங்கு முடிந்ததும் தொடங்க உள்ளனர்.தெலுங்கு சினிமாவில் விஜய் தேவரகொண்டா தயாரித்த படத்தில் ஹீரோயினாக நடித்தார்.தனக்கு ஏற்ற கதைகளை மட்டுமே ஒப்புக் கொள்வதாகவும் கூறியிருக்கிறார்.வெள்ளித்திரை நடிகை வாணி போஜன்.