முகப்பு
நிகழ்வுகள்

உலகம் சந்தித்த பேரிடர்கள்

Updated On : 29 டிசம்பர், 2020 at 3:11 PM
சீனாவில் கடந்த ஜூலை மாதம் பெய்த கனமழை காணமாக உலகிலேயே 3-வது மிகப்பெரிய அணையான த்ரீ கார்ஜஸ் அணை நிரம்பி, அதிகப்படியான தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால் பல மாகாணங்கள் வெள்ளத்தில் மூழ்கின.
பகிர்:
ஆகஸ்ட் மாதத்தில் சீனாவின் கன்ஸு மாகாணத்தின் பிகோய் நகரில் பெய்த கனமழையால் ஏற்பட்ட பெருவெள்ளம்.
கலிஃபோர்னியாவில் ஆகஸ்ட் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் தொடர்ந்து மூன்று நாள்கள் சுமார் 11 ஆயிரம் இடங்களில் மின்னல் தாக்கியது. இதனால் பல வனப்பகுதிகளும் வீடுகளும் தீவிபத்தில் கருகின.
பாகிஸ்தானின் கராச்சியில் கடந்த மே மாதம் 22-ஆம் தேதி பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் 98 பேர் பலியாகினர். இரண்டு பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

Advertisement

கரோனா பேரிடர் ஏற்படுத்திய பல பாதிப்புகளில், பள்ளி மாணவ, மாணவிகள் ஆன்லைன் மூலமாக பாடங்களை கற்கும் நிலை ஏற்பட்டதும் ஒன்று. மெக்ஸிகோ சிட்டியில் பாடம் கற்கும் மாணவன். (புகைப்படம் ஏபி)
கடந்த செப்டம்பர் மாதம் லெபனான் தலைநகா் பெய்ரூட் துறைமுகத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 3 ஆயிரம் டன் அமோனியம் நைட்ரேட் வெடித்துச் சிதறியது. இந்த அதிபயங்கர வெடிவிபத்தில் 190 பேர் பலி. 6,500 பேர
பாகிஸ்தானின் கராச்சி நகரில் கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் பெய்த கனமழை காரணமாக கடும்ட வெள்ளம் ஏற்பட்டது. ஏராளமான வீடுகள் சேதமடைந்தன.
கடந்த ஆகஸ்ட் மாதம் 17-ம் தேதி கலிஃபோர்னியா மாகாணத்தில் வரலாறு காணாத அளவுக்கு வெப்பநிலை பதிவானது. டெத் வேலி தேசிய பூங்காவில் அதிகபட்சமாக 130 டிகிரி பாரன்ஹீட் (54.4 டிகிரி செல்சியஸ்) வெப்பநிலை பதிவானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.