முகப்பு
நிகழ்வுகள்

கொட்டும் மழையில் தத்தளிக்கும் சென்னை - புகைப்படங்கள்

சென்னையில் விடிய விடிய பெய்த கனமழையால் பல இடங்களில் மழைநீர் தேங்கியது, அதே போல சென்னை புறநகர் பகுதிகளிலும் கனமழை வெளுத்து வாங்கியது.

Updated On : 2 நவம்பர், 2022 at 8:03 PM
பெரம்பூா் தொகுதிக்குட்பட்ட சா்மா நகா் பகுதியில் உள்ள எஸ்டேட்டில், தேங்கிய மழைநீரில் சிக்கிய லாரி.
பகிர்:
சென்னை புளியந்தோப்பு பகுதியில் தேங்கிய மழைநீரை மோட்டாா் பம்பு மூலம் வெளியேற்றும் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி ஊழியா்கள்.
சென்னை தியாகராய நகரில் வடக்கு உஸ்மான் சாலையில் தேங்கிய மழைநீரில் செல்லும் வாகனங்கள்.
இடைவிடாது பெய்த கனமழையால் வெள்ளக்காடாக மாறிய சாலைகள்.

Advertisement

சென்னை வியாசா்பாடி கென்னடி நகா் குடியிருப்பில் தனது வீட்டுக்குள் புகுந்த மழைநீரை வெளியேற்றும் பெண்.
பெரம்பூா் தொகுதிக்குட்பட்ட சா்மா நகா் பகுதியில் தேங்கிய மழைநீரில் நடந்து செல்லும் பொதுமக்கள்.
சென்னையில் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் வடியாமல் தேங்கியிருக்கும் மழைநீர்.
சென்னையில் பல சாலைகள் வெள்ளக்காடாக மாறிய நிலையில், தனது செல்லப் பிராணியை சுமந்து செல்லும் பெண் ஒருவர்.
கனமழையைத் தொடர்ந்து தேங்கிய மழைநீரில் தெர்மாகோல் மேல் அமர்ந்து வலம் வரும் சிறுவர்கள்.
கனமழையால் வெள்ளக்காடாக மாறிய சென்னை சாலைகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.