கோரத் தாண்டவம் ஆடிய பிபர்ஜாய் புயல் - புகைப்படங்கள்
தென் கிழக்கு அரபிக் கடலில் உருவான அதி தீவிர புயலான பிபர்ஜாய், குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள ஜக்காவ் துறைமுகம் அருகே 140 கி.மீட்டர் வேகத்தில் பலத்த மழையுடன் கரையைக் கடந்தது.
மிகவும் அதிதீவிர புயலாக உருவாகியுள்ள இந்த புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது.புயலால் மாநில மின்வாரியத்துக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. சேதமடைந்த மின்கம்பங்களை சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.குளம் போல மாறிய சாலை.
Advertisement
Advertisement
பலத்த மழையால் சாலை முழுவதும் மழை நீர் தெங்கியது.பலத்த காற்று மற்றும் கனமழையால் மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளதால் பல கிராமங்கள் இருளில் மூழ்கியது.புயலைத் தொடா்ந்து கிராமங்களில் மின்விநியோகம் துண்டிப்பு.
பல இடங்களில் உயரமான கடலலைகள் எழுந்தது.அரபிக்கடலின் வெப்பம் அதிகரிப்பதால், அங்கு உருவாகும் புயல்களின் எண்ணிக்கையும், தீவிரமும் அவற்றின் தாக்கமும் பெரும் சிக்கலாக உருவெடுத்துள்ளன.பருவநிலை மாற்றமும் புவி வெப்பமயமாதலும் கடலின் வெப்பம் அதிகரிப்பதற்கான முக்கியக் காரணிகளாகக் கருதப்படுகின்றன.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைப்பு.தொடர்ந்து உயர்ந்து வரும் வெள்ளம்.கோரத் தாண்டவம் ஆடிய பிபர்ஜாய் புயல்.
நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்திருப்பதால், அவர்கள் வீடு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.புயலால் வீட்டின் கூறைகளும் காற்றில் பறந்தன.சாலையில் வேருடன் சாய்ந்த மரம்.
பலத்த சூறைக் காற்றுடன் மழை.முக்கிய சாலைகளில் சாய்ந்து கிடக்கும் மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன.ஏராளமான மரங்கள் வேறோடு சாய்ந்தன. வீட்டின் கூறைகளும் காற்றில் பறந்தன.
புயலின் காரணமாக பலத்த சூறைக் காற்றும், கனமழையும் கொட்டித் தீர்த்தது.