முகப்பு
செய்திகள்

கார்கில் போர் நினைவு தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:59 AM
கார்கில் போர் 21வது வெற்றி தினம் இன்று தலைநகர் தில்லியில் அனுசரிக்கப்பட்டது.
பகிர்:
கார்கில் விஜய் திவாஸ் தினத்தன்று கார்கில் போரின் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர்.
கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு போரில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு மத்திய அமைச்சர்கள், இந்திய ராணுவ உயர் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.
வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்.
பாதுகாப்பு தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத், கடற்படைத் தளபதி கரம்பீர் சிங், ராணுவத் தலைமை ஜெனரல் எம்.எம்.நாரவணே ஆதியோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தில்லியில் உள்ள அமர் ஜவான் ஜோதியில் மலர்வளையம் வைத்து, கார்கில் போரில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார்.
மூவர்ணக் கொடியை மீண்டும் நிலைநாட்டியதற்காக இந்திய ராணுவத்தினருக்கு தலைவணங்குகிறேன்.
தில்லியில் உள்ள போர் நினைவிடத்தில் அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தளபதிகள் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.
துணிச்சல்மிக்க இந்திய வீரர்களுக்கு வணக்கம் செலுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.