76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தில்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார். 
செய்திகள்

செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி - புகைப்படங்கள்

76வது சுதந்திர தினத்தையொட்டி தேசியக் கொடியை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றி வைத்து முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.

DIN
முப்படைகளின் மரியாதையை ஏற்று விழா மேடைக்குச் சென்றார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த பிரதமர் மோடி.
மூவர்ணக் கொடியை ஏற்றிய உடன் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஹெலிகாப்டர்கள் மூலம் தேசியக் கொடிக்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.
பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று 13ஆம் தேதி முதல் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி நாட்டுப் பற்றை வெளிப்படுத்தி வருகின்றனர்.
முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றுகொண்டார்.
76வது சுதந்திர தினத்தையொட்டி, செங்கோட்டையை சுற்றி ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டது.
பிரதமர் மோடி சுதந்திர தின விழாவில் தேசியக் கொடி ஏற்றுவது இது 9வது முறையாகும்.
வெள்ளை நிற தலைப்பாகை அணிந்து வந்த பிரதமர் மோடி தலைப்பாகையில் காவி மற்றும் பச்சை நிறக் கோடுகள் இருந்தன.
தனது உரையில் விடுதலை வீரர்களை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி, தமிழகத்தின் வேலு நாச்சியார் மற்றும் பாரதியார் பெயர்களையும் குறிப்பிட்டார்.
விழாவில் கலந்து கொண்ட காங்கிரஸ் தலைவர்கள், எம்.பி.க்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள்.
விழாவில் கலந்து கொண்ட பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தலைமை நீதிபதி என்வி ரமணா, மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர்.
சுதந்திர தின விழாவில் கலந்து கொண்ட முப்படை தளபதிகள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள் மற்றும் பல நாடுகளின் தூதர்கள்.
ஒன்பது சுதந்திர தின உரைகளின் போது, பிரதமர் மோடி வெவ்வேறு தலைப்பாகைகளை அணிந்திருப்பதைக் உணர்த்தும் புகைப்படம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

6.50 லட்சம் பிகார் வாக்காளர்களை தமிழ்நாட்டில் இணைப்பதா? ப.சிதம்பரம் கண்டனம்!

கால்வாயில் கார் கவிழ்ந்து பலியானவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் நிதியுதவி!

அதிமுக முன்னாள் அமைச்சா்கள் விரைவில் பாஜகவில் இணைவாா்கள்: மாணிக்கம் தாகூா் எம்.பி

மனைவி இருக்கும்போதே இளம்பெண்ணுடன் லிவ்-இன்-டுகெதர் வாழ்க்கை: கணவன் குத்திக் கொலை!

ஓவல் டெஸ்ட்: இங்கிலாந்து 164 ரன்கள் குவிப்பு; வெற்றி யாருக்கு?

SCROLL FOR NEXT