காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் - புகைப்படங்கள்
அரசுப்பள்ளி மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கவும், ஊட்டசத்து குறைபாட்டை போக்கவும், இடைநிற்றலை தவிர்க்கவும், 'காலை உணவு திட்டம்' எனும் பெயரில் மதுரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
மதுரையில் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.
பகிர்:
மதுரை நெல்பேட்டையில் உள்ள ஆதிமூலம் மாநகராட்சி பள்ளியில் காலை உணவை மாணவர்களுக்கு ஊட்டிவிட்டு அவர்களுடன் அமர்ந்து உணவை உண்ணும் முதல்வர் மு.க.ஸ்டாலின்.மாணவர்களுக்கு உணவை ஊட்டிவிட்டு அவர்களுடன் அமர்ந்து உணவை உண்ணும் முதல்வர் மு.க.ஸ்டாலின்.ரூ.33.56 கோடியில் காலை உணவு திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரையில் தொடங்கி வைத்தார்.பள்ளி மாணவர்களுக்காக காலை உணவு திட்டம் தொடக்க விழா முதல்வர் மு.க.ஸ்டாலின்.அண்ணாவின் பிறந்தநாளில் இந்த திட்டம் துவக்கம்.குழந்தைகள் உணவு உண்ணும் போது அவர்கள் முகத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சியால் எனக்கு அளவில்லாத ஆனந்தம் ஏற்பட்டது என்றார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.முதல்கட்டமாக 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தபட்டு, 1,14,095 மாணவ, மாணவியர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படவுள்ளது.மதுரை நெல்பேட்டையில் உள்ள ஆதிமூலம் மாநகராட்சி பள்ளியில் காலை உணவை உண்ணும் குழந்தைகள்.பள்ளிக்கு பசியோடு வரும் குழந்தைகளுக்கு முதலில் உணவு வழங்கிய பிறகு வகுப்பறைக்கு செல்லும் வகையில் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.முதல்வரின் காலை உணவு திட்டம் என்ற பெயரில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.