முகப்பு
செய்திகள்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி - புகைப்படங்கள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகப் புகழ்பெற்ற மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று (ஜனவரி 17) வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்றது.

Updated On : 17 ஜனவரி, 2023 at 7:05 PM
ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:30 PM
அமைச்சர்கள் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், உதயநிதி ஸ்டாலின், மூர்த்தி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நடிகர் சூரி உள்ளிட்டோர் பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்து கொண்டு ஜல்லிக்கட்டை ரசித்தனர்.
வாடிவாசல் வழியாக சீறிப் பாய்ந்து வரும் காளைகள்.

Advertisement

வாடிவாசல் வழியாக சீறிப் பாய்ந்த காளைகளை, மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர்.
காளையர்களின் பிடியில் சிக்காமல் கெத்து காட்டி காளைகள்.
காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்க மோதிரம், தங்க காசு உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.
மாடுபிடி வீரரான அபி சித்தர் 26 காளைகளை அடக்கி முதலிடத்திலும், 20 காளைகளை அடக்கிய ஏனாதி அஜய் இரண்டாம் இடமும், 12 காளைகளை அடக்கிய ரஞ்சித் மூன்றாம் இடம் பெற்றனர்.
ஜல்லிக்கட்டை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.