அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி - புகைப்படங்கள்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகப் புகழ்பெற்ற மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று (ஜனவரி 17) வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்றது.
அமைச்சர்கள் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், உதயநிதி ஸ்டாலின், மூர்த்தி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நடிகர் சூரி உள்ளிட்டோர் பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்து கொண்டு ஜல்லிக்கட்டை ரசித்தனர்.
வாடிவாசல் வழியாக சீறிப் பாய்ந்து வரும் காளைகள்.
வாடிவாசல் வழியாக சீறிப் பாய்ந்த காளைகளை, மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர்.
காளையர்களின் பிடியில் சிக்காமல் கெத்து காட்டி காளைகள்.
காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்க மோதிரம், தங்க காசு உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.
மாடுபிடி வீரரான அபி சித்தர் 26 காளைகளை அடக்கி முதலிடத்திலும், 20 காளைகளை அடக்கிய ஏனாதி அஜய் இரண்டாம் இடமும், 12 காளைகளை அடக்கிய ரஞ்சித் மூன்றாம் இடம் பெற்றனர்.
ஜல்லிக்கட்டை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.