அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் உள்ள ஏவுதளத்திலிருந்து இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா உள்ளிட்ட 3 நபரை அழைத்து செல்லும் ஸ்பேஸ்-எக்ஸ் பால்கன் 9 ராக்கெட். - -
28 மணிநேர பயணத்திற்கு பிறகு, நாளை (ஜூன் 26) மாலை 4.30 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தை ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் அடையும்.பல்வேறு காரணங்களால் ஒத்திவைக்கப்பட்ட இந்த மிஷன் 8வது முறையாக இன்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. - -குழு உறுப்பினர்களுடன் விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்த பால்கன்-9 ராக்கெட். - -
Advertisement
Advertisement
கடந்த நாற்பது ஆண்டுகளில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் முதல் இந்திய விண்வெளி வீரர் என்ற வரலாற்று சாதனையை பெற்றார் சுபான்ஷு சுக்லா.விண்ணில் வெற்றிகரமாக பாயும் பால்கன்-9 ராக்கெட்.இந்திய விமானப்படையின் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா, அமெரிக்காவைச் சேர்ந்த மிஷன் கமாண்டர் பெக்கி விட்சன், ஹங்கேரியைச் சேர்ந்த திபோர் கபு மற்றும் போலந்தைச் சேர்ந்த ஸ்லாவோஸ் உள்ளிட்டோர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பால்கன்-9 ராக்கெட் மூலம் சென்றுள்ளனர்.
அமெரிக்காவின் புளோரிடாவின் கேப் கனாவெரலில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புறப்படுவதற்கு முன் ஸ்பேஸ்எக்ஸ் பால்கன் 9 குழுவினர்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.