ஹர்மன்பிரீத் கௌர் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியினர், மகளிர் உலக கோப்பை தொடரில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைப்பு. ANI
 இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க மகளிர் அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய் ஷாவிடமிருந்து ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 கோப்பையை வாங்க வந்த இந்திய மகளிர் அணித் தலைவர் ஹர்மன்பிரீத் கௌர் அப்போது நடனமாடினார்.முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் அணியினர்.முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 298 ரன்கள் எடுத்தது.இந்தியா 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல்முறையாக உலகக் கோப்பையை தட்டி சென்றது.கிரிக்கெட் வீரர்கள், தலைவர்கள், பிரபலங்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என அனைவரும் உலக சாம்பியன் அணிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய் ஷாவிடமிருந்து கோப்பையை பெறும் இந்திய மகளிர் அணித் தலைவர் ஹர்மன்பிரீத் கௌர்.தென்னாப்பிரிக்க மகளிர் அணித் தலைவர் லாரா உடன் கைகுலுக்கிய இந்திய மகளிர் அணித் தலைவர் ஹர்மன்பிரீத் கௌர்.