மருத்துவம்

தீராத மலச்சிக்கலைப் போக்க உதவும் அற்புத கசாயம்

கோவை பாலா

நீண்ட நாட்களாக தீராத மலச்சிக்கலால் அவதிப்படுவோருக்கு இந்த கசாயம் பயனுள்ளதாக இருக்கும். பயன்படுத்திப் பாருங்களேன். 

தேவையான பொருட்கள்

கொடிப் பசலைக் கீரை   -  ஒரு கைப்பிடி

கொத்தமல்லி விதை (தனியா)  -  5 கிராம்

சீரகம்  -  ஒரு ஸ்பூன்

செய்முறை

முதலில் கொடிப்பசலைக் கீரையை சுத்தப்படுத்தி ஆய்ந்து எடுத்து நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் 500 மி.லி அளவு தண்ணீர் ஊற்றி  அதில் ஆய்ந்து வைத்துள்ள  கீரையையும் , தனியா மற்றும் சீரகத்தையும் சேர்த்து   நன்கு கொதிக்க வைக்கவும்.

நன்றாக கொதித்த பின்பு அதனை பாதியளவாகச்(150 மி.லி) சுண்ட வைத்து இறக்கி வடிகட்டிக் கொள்ளவும்.

பயன்கள்

இந்தக் கசாயம் தீராத மலச் சிக்கலை போக்க உதவும் கசாயம்.

மலச்சிக்கலால்  அவதிப்படுபவர்கள் தினமும் காலை வேளையில் இந்தக் கசாயத்தை தயார் செய்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் தீராத மலச்சிக்கல்  தீரும்.

இரவு படுக்கப் போகும் முன்

வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து   உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும், வர மிளகாய்க்கு மாற்றாக  மிளகையும் பயன்படுத்தவும்.

- கோவை பாலா

இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.
Cell  :  96557 58609  
Covaibala15@gmail.com  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT