செய்திகள்

இன்றைய மருத்துவ சிந்தனை பெருங்காயம்

பெருங்காயத்தை நீர் சேர்த்து அரைத்து , குழந்தைகளின் நெஞ்சில் தடவிவந்தால் கக்குவான்

தினமணி

பெருங்காயத்தை நீர் சேர்த்து அரைத்து, குழந்தைகளின் நெஞ்சில் தடவிவந்தால் கக்குவான் இருமல் குணமாகும்.

பெருங்காயம், கிராம்பு இரண்டையும் போட்டுக் கொதிக்க வைத்த தண்ணீரில் வாய் கொப்பளித்தால் பல் வலி குணமாகும்.

பெருங்காயம் ஒரு பங்கு, வெந்தயம் பத்து பங்கு எடுத்து இரண்டையும் வறுத்துப் பொடி செய்து, கால் ஸ்பூன் பொடியை மோரில் கலந்து குடித்துவந்தால் கடுமையான வயிற்று வலி உடனே குணமாகும்.

பெருங்காயம், மிளகு இரண்டையும் தலா அரை கிராம் எடுத்து வெந்நீரில்  போட்டுக் குடித்தால் தலைவலி குணமாகும்.

பெருங்காயத்துடன் கோழி முட்டையின் மஞ்சள் கருவைக் கலந்து சாப்பிட்டால் வறட்டு இருமல் குணமாகும்.

பெருங்காயத்தை நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சி, ஆறிய பிறகு அந்த எண்ணெயில் இரண்டு துளிகளை காதில் விட்டால் காது வலி குணமாகும்.

பெருங்காயத்தைப் பொரித்து பூண்டு மற்றும் பனை வெல்லத்தோடு சேர்த்து தினமும் காலையில் சாப்பிட்டால், பிரசவத்துக்குப் பிறகு கர்ப்பப் பையில் உள்ள அழுக்கு வெளியேறும்.

KOVAI  HERBAL CARE
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  
Foot and Hand Reflexologist
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கார் கூந்தல்... ஸ்ரீநிதி ஷெட்டி!

கூலி வெற்றிபெற ரஜினி போஸ்டர்களுடன் திருச்சி விநாயகர் கோயிலில் விளக்கேற்றி வழிபாடு!

கீர்த்தி பாண்டியனின் அஃகேனம்: ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

காவல்துறை குவிப்பு! போராட்டத்தைக் கைவிட தூய்மைப் பணியாளர்கள் மறுப்பு!! மீண்டும் பேச்சுவார்த்தை?

ராணுவப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT