செய்திகள்

அஜீரண பிரச்னைக்கு என்ன செய்யலாம்?

உ.இராமநாதன்
  • அஜீரண பிரச்னை உள்ளவர்கள் சீரகத்துடன் மிளகு சேர்த்து லேசாக வறுத்து பொடித்து வைத்துக் கொள்ளவும். இதை சாதத்தில் சேர்த்து  சாப்பிட்டால் அஜீரணம் அகலும். நன்கு பசி வரும்.
  • சிறுநீர் சரியாகப் போகாமல் அவதிப்படுவோர் பிரண்டை துவையல் சாப்பிடலாம். பார்லியை கஞ்சி காய்ச்சி  குடிக்கலாம், இதனால் நீர்தாரளமாக வெளி யேறும்.
  • நீரிழிவு நோய் உள்ளவர்கள் வாழைப்பூ  பொரியல் செய்து சாதத்தில் சேர்த்து சாப்பிட்டு வர  சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.
  • பப்பாளிக்காயை உணவில் சேர்த்துக் கொண்டால் குடற் புழுக்கள் அழிந்து, மலத்துடன் வெளிப்படும்.
  • முருங்கைப்பூவை  பொரியல்  செய்து சாப்பிட்டு வர கை, கால் மூட்டு வலி நீங்கும்.
  • அன்னாசிப்பழச்சாறுடன், கருப்பட்டி பொடித்திட்டு பருகிவர, மூளை சீராக இயங்கும். முதியவர்களுக்கான ஞாபக சக்தியைப் பெருக்க இது எளிய  இயற்கை மருந்து.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT