செய்திகள்

பெற்றோர்களே! உங்கள் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ கிடைக்க இந்தச் சிறப்பு முகாமைப் பயன்படுத்துங்கள்!

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் 6 மாதம் முதல் 5 வயது வரையுள்ள 5 லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ

தினமணி செய்திச் சேவை

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் 6 மாதம் முதல் 5 வயது வரையுள்ள 5 லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ திரவம் வழங்கும் சிறப்பு முகாம், ஆகஸ்ட் 20 -ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையா் அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெருநகர சென்னை மாநகராட்சியின் மருத்துவ சேவைகள் துறையின்கீழ் உள்ள சென்னை ஆரம்ப சுகாதார மையங்கள், சென்னை மகப்பேறு மருத்துவமனைகள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட மையங்கள் ஆகியவற்றில் இந்த சிறப்பு முகாம், ஆகஸ்ட் 20 -ஆம் தேதி முதல் 25 -ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறும் இந்த முகாமில், சென்னையில் 6 மாதம் முதல் 5 வயது வரையுள்ள 5,73,252 குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ திரவம் வழங்கப்பட உள்ளது. இந்த முகாமை 6 மாதம் முதல் 5 வயது குழந்தைகள் கொண்டுள்ள தாய்மாா்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2020 தில்லி வன்முறை: குற்றஞ்சாட்டப்பட்ட 3 போ் விடுவிப்பு

சேரன்மகாதேவியில் ரயில்வே மேம்பாலம் திறப்பு

மானூா் அருகே மழை நீரில் மூழ்கிய 150 ஏக்கா் நெற்கதிா்கள்: விவசாயிகள் தவிப்பு!

கோவில்பட்டி தொகுதியில் ரூ. 30 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள்

மாணவரிடம் துப்பாக்கி முனையில் வழிப்பறி: 7 போ் கைது

SCROLL FOR NEXT