செய்திகள்

சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய அருமருந்து!

முதலில் வெந்தயக் கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டுக் காய்ந்தவுடன்

கோவை பாலா

 
வெந்தயக் கீரை துவையல்

தேவையான பொருட்கள்

வெந்தயக் கீரை - 100 கிராம்
தக்காளி - 2
மிளகு - 10 கிராம்
வெங்காயம் - 2
கடலைப் பருப்பு - 20 கிராம்
உளுந்தம் பருப்பு - 20 கிராம்
பெருங்காயம் - தேவையான அளவு
கடுகு - தேவையான அளவு
கறிவேப்பிலை - தேவையான அளவு

செய்முறை

முதலில் வெந்தயக் கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டுக் காய்ந்தவுடன் அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு, மிளகு, கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு வறுக்கவும். அதனுடன் சுத்தம் செய்து வைத்துள்ள கீரையையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.

பின்பு அதனுடன் நறுக்கிய வெங்காயம், தக்காளியைப் போட்டு இன்னும் சிறிதளவு எண்ணெய் சேர்த்து வதக்கி எடுத்து தேவையான அளவு உப்பு சேர்த்து துவையலாக அரைத்துக் கொள்ளவும்.

பயன்கள் : இந்த துவையலை சர்க்கரை குறைபாடு உள்ளவர்கள் தினமும் உணவில் அவசியம் சேர்த்து கொள்வது மிக அவசியம். மேலும் இது உஷ்ண நோய்களையும், குடற்புண்ணையும் போக்கக் கூடிய அருமருந்து துவையலாக இருக்கும்.

இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ம.க.ஸ்டாலின் மீது கொலை முயற்சி- நயினார் நாகேந்திரன் கண்டனம்

தில்லியில்.. சட்டவிரோதமாக வசித்த 15 வெளிநாட்டினர் வெளியேற்றம்!

கடன் வட்டியைக் குறைத்த கரூர் வைஸ்யா வங்கி!

இயக்குநர் பிறந்த நாள்! ஜனநாயகன் மேக்கிங் விடியோ!

3ஆவது பிரசவத்துக்கு மகப்பேறு விடுப்பு மறுப்பது நியாயமற்றது: சென்னை உயர் நீதிமன்றம்

SCROLL FOR NEXT