முகப்பு
செய்திகள்

பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் 30 கிலோ தங்கம் கொள்ளை

கில் சாலையில் உள்ள ஐ.ஐ.எஃப்.எல் ஃபைனான்ஸில் காலை 11 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்ததாகப் போலீஸார் தெரிவித்தனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 3:53 PM
கோப்புப் படம்
பகிர்:

பஞ்சாபிலுள்ள லூதியானாவில் பட்டப்பகலில் ஆயுதம் ஏந்திய நான்கு கொள்ளையர்கள், தனியார் நிதி நிறுவனத்தில் நுழைந்து, அங்குள்ளோரைத் துப்பாக்கிமுனையில் நிறுத்தி, கிட்டத்தட்ட 30 கிலோ தங்கத்தை கொள்ளையடித்துள்ளனர்.

இன்று காலை, கில் சாலையில் உள்ள ஐ.ஐ.எஃப்.எல் ஃபைனான்ஸில் காலை 11 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்ததாகப் போலீஸார் தெரிவித்தனர்.

இது குறித்து விசாரணை நடந்து வரும் நிலையில், இந்தக் குற்றச் செயல் சி.சி.டி.வி.களில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.